ஆப்நகரம்

சூடான மணலில் சமைக்கும் ராணுவ வீரர்கள்

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜெய்சால்மரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் சுடு மணலில் சமைத்து ருசித்துள்ளனர்.

TNN 21 May 2016, 3:13 pm
ஜெய்சால்மர்: இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜெய்சால்மரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் சுடு மணலில் சமைத்து ருசித்துள்ளனர்.
Samayam Tamil jawans roast papad cook rice on hot sand
சூடான மணலில் சமைக்கும் ராணுவ வீரர்கள்


பாதுகாப்புப் படை வீரர்களிடம் உள்ள தட்பவெப்ப நிலை குறித்து அறியும் மின் இயந்திரத்தில் 55 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதையடுத்து சுடு மணலில் பாத்திரம் வைத்து 3 மணி நேரத்தில் சாப்பாடு தயார் செய்து சாப்பிட்டதாக தெரிவித்துள்ளனர்.

வானிலை ஆய்வு மையம் அளித்த தகவலின்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக 47.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும், எல்லைப்பகுதி என்பதால் வானிலை ஆய்வு மையம் தெளிவான வெப்ப நிலையை கணிக்க முடியாது என கூறியுள்ளனர்.

மேலும், ராணுவ வீரர்கள் கூறுகையில், இங்கு வெப்பத்தின் தாக்கம் தாங்க முடியவில்லை. மிகவும் கடுமையாக இருக்கிறது. தலையில் பாதுகாப்புக்காக துணியை சுற்றிக் கொள்வதாகவும், எப்பொழுதும் தண்ணீர் பாட்டில்களை கூடவே வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ரோந்து பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் அதிகமாக ஒட்டகத்திலேயே செல்வதாக கூறியுள்ளானர். நடந்து சென்றால் பூட்ஸ் உருகி காலில் புண் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி