ஆப்நகரம்

ஜெ., சொத்துகுவிப்பு வழக்கு: மார்ச் 10-க்கு ஒத்துவைப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரனை மார்ச் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

TNN 25 Feb 2016, 12:45 pm
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரனை மார்ச் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil jayalalitha assets case adjourned to march 10
ஜெ., சொத்துகுவிப்பு வழக்கு: மார்ச் 10-க்கு ஒத்துவைப்பு


இந்த வழக்கில் மார்ச் 10-ஆம் தேதியன்று கர்நாடக அரசின் வாதம் மீண்டும் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதா சார்பில் அசல் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை நாளை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது.

Hearing on Karnataka Government's appeal challenging HC order acquitting TN CM Jayalalithaa in a DA Case, adjourned till March 10.— ANI (@ANI_news) February 25, 2016

முன்னதாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் செய்ததாக நீதிபதி குன்ஹா 2014 செப்டம்பர் 27-ஆம் தேதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர்.

நீதிபதி குமாரசாமி இந்த அப்பீல் மனுவை விசாரித்து ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து கர்நாடக அரசும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இதற்கு ஜெயலலிதா தரப்பினர் பதில் தருமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.

அடுத்த செய்தி