ஆப்நகரம்

கர்நாடகா ஜெயாநகர் தொகுதி தேர்தல்: 51% வாக்குப்பதிவு

கர்நாடகா மாநிலம் ஜெயாநகர் தொகுதியில் இன்று நடைபெற்ற சட்டமன்றத தேர்தலில், மாலை 5.00 மணி நிலவரப்படி 51 சதவிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Samayam Tamil 11 Jun 2018, 6:26 pm
கர்நாடகா மாநிலம் ஜெயாநகர் தொகுதியில் இன்று நடைபெற்ற சட்டமன்றத தேர்தலில், மாலை 5.00 மணி நிலவரப்படி 51 சதவிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
Samayam Tamil vote booth


கா்நாடகாவில் கடந்த மே மாதம் 12ம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. 224 தொகுதிகளுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ராஜராஜேஸ்வரி தொகுதியில் முறைகேடுகள் நடைபெற்றதால் தோ்தல் தள்ளி வைக்கப்பட்டு பின்னா் நடத்தப்பட்டது. இதே போன்று ஜெயாநகரில் பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினா் விஜயகுமாா் திடீரென உயிாிழந்தா்ா. இந்நிலையில் ஜெயா நகா் தொகுதியில் தோ்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

ஒத்தி வைக்கப்பட்ட தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உயிாிழந்த விஜயகுமாரின் சகோதரா் பிரகலாத் பாபு பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.

இந்நிலையில், இன்று மாலை 5.00 மணி நிலவரப்படி 51 சதவிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்று பதிவான வாக்குகள் வருகிற 13ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்று தொிகிறது. தோ்தல் நடைபெறுவதைத் தொடா்ந்து அத்தொகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி