ஆப்நகரம்

காங்கிரஸை கழற்றிவிட்டு பாஜகவுக்கு வால் பிடிக்கும் மஜத!

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க மதசார்பற்ற ஜனதா தளம் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மஜத சந்தர்ப்பவாத கட்சி என விமர்சிக்கப்பட்டு வருகிறது. யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களுக்கு துதி பாடுகிறது என விமர்சனம் எழுகிறது.

Samayam Tamil 27 Jul 2019, 8:12 am
கர்நாடகவில் ஆட்சி அமைக்க சட்டசபையில் 112 உறுப்பினர்களின் எண்ணிக்கை வேண்டும் என்ற நிலையில், பாஜகவிடம் 105 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாஜக ஆட்சி அமைத்தாலும் நீடிப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன என்று கர்நாடக அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்றார். அதேபோல கர்நாடக சபாநாயகர் எடுக்கும் நடவடிக்கைகளை பாஜக தலைமை உன்னிப்பாக கவனித்து வருவதாக சொல்கின்றனர்.
Samayam Tamil kumarasamy.


முன்னதாக மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேர் ராஜினாமா செய்ததால், குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அண்மையில் சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததை அடுத்து, பாரதிய ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் தற்போது புதிய அரசு அமைந்துள்ளது. வரும் திங்கள்கிழமை அன்று சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார்.

இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அக்கட்சி எம்எல்ஏக்களுடன், குமாரசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது எடியூரப்பாவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது குறித்து குமாரசாமி பேசியதாகவும், இதற்கு ஒரு சில எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் அக்கட்சியின் எம்எல்ஏவும், முன்னாள் மாநில அமைச்சருமான ஜி.டி.தேவேகவுடா கூறினார். எனினும் இந்த விவகாரத்தில் குமாரசாமி தான் இறுதி முடிவு எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி