ஆப்நகரம்

கல்வி அமைச்சர் டூ 11ஆம் வகுப்பு மாணவன் - ரிவர்சில் திரும்பிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ!

பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்க மாநில கல்வி அமைச்சர் விண்ணப்பித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 11 Aug 2020, 1:07 pm
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் கல்வி அமைச்சராக இருப்பவர் ஜகர்நாத் மாதோ(54). இவர் பிறந்து வளர்ந்ததும் அனைத்தும் போகரோ மாவட்டம் சந்திரபுரா பகுதியில் உள்ள அலர்கோவில் தான். 1995ஆம் ஆண்டு டெலோவில் உள்ள நேரு உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பை நிறைவு செய்தார். பள்ளி இறுதியாண்டு தேர்வை எழுதுவதற்கே பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஏனெனில் குடும்ப சூழல் காரணமாக தொடர்ச்சியாக பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின்னர் அரசியல் மீது ஆர்வம் கொண்டு படிப்பை அப்படியே கைவிட்டுவிட்டு களத்தில் இறங்கினார்.
Samayam Tamil Jagarnath Mahato


அன்று தொடங்கிய அரசியல் செயல்பாடுகள் தற்போது கல்வி அமைச்சராக அவரை உயர்த்தியுள்ளது. இவர் தும்ரி தொகுதியில் நின்று எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். இந்நிலையில் ஒரு மாநிலத்தின் கல்வியையே தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவருக்கு உரிய கல்வித்தகுதி வேண்டாமா என்று ஜகர்நாத் அமைச்சராக பதவியேற்றது முதலே அவர் மீது விமர்சனங்கள் எழத் தொடங்கின.

சொத்தைப் பிரிக்கும் போது பெண்களுக்கும் சம பங்கு - உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

இந்த சூழலில் தான் அதிரடியான முடிவை எடுத்துள்ளார். 11ஆம் வகுப்பில் சேர்ந்து படிப்பதற்கு பள்ளி ஒன்றில் விண்ணப்பித்துள்ளார். இதுபற்றி ஜகர்நாத் மாதோ கூறுகையில், யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. விட்ட இடத்தில் இருந்து படிப்பைத் தொடங்கவுள்ளேன். என் மீதான விமர்சனங்கள் தான் கல்வி கற்க ஊக்கமளித்துள்ளன.

இனி ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வித்துறையை மட்டுமல்ல, எனது கல்வியையும் சேர்த்துக் கவனிக்கப் போகிறேன். இதையொட்டியே 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்தேன். உயர்கல்வி கற்க ஆசையுள்ளது. முதலில் எனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்வேன். பின்னர் பட்டதாரி ஆவது பற்றி யோசிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா - என்ன சொல்கிறது தேர்தல் ஆணையம்?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுமார் 30 எம்.எல்.ஏக்கள் 8 முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் பொருந்தும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்த செய்தி