ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ய இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்குவது தொடர்பாக முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அகவிலைப்படி உயர்வு
இதன் தொடர்ச்சியாக மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு ஊழியர்களுக்கு தற்போது அமலில் இருக்கும் 28 சதவீத அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக வழங்கப்படும். இது கடந்த ஜூலை ஒன்றாம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டு சம்பளத்தில் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாயத்து ராஜ், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை,
யுனிவர்சல் பென்சன் திட்டத்திற்கு ஒப்புதல்
தொழிலாளர் துறை உள்ளிட்ட துறைகளில் ஊழியர்கள் நியமனம் தொடர்பாக 14 விதிமுறைகளை திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 37 பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக பாதுகாப்பு துறையின் பரிந்துரையை ஏற்று யுனிவர்சல் பென்சன் திட்டத்தை (UPS) அமல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெறுவதில் புதிய திருத்தம்
இதன்மூலம் தகுதி வாய்ந்த அனைத்து நபர்களும் ஓய்வூதியம் பெற முடியும். அதேசமயம் ஓய்வூதியம் பெறக்கூடியவர் அல்லது அவரின் அடுத்த குடும்ப உறுப்பினர் வருமான வரி செலுத்தும் வகையில் வருமானம் பெறக்கூடியவராக இருந்தாலோ அல்லது மத்திய, மாநில, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய நபராக இருந்தால் ஓய்வூதியம் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் 21ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில்,
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தவும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் அளிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் மத்திய அரசுக்கு ஆண்டிற்கு 9,488.70 கோடி ரூபாய் செலவு ஏற்படும். 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு ஊழியர்களுக்கு தற்போது அமலில் இருக்கும் 28 சதவீத அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக வழங்கப்படும். இது கடந்த ஜூலை ஒன்றாம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டு சம்பளத்தில் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாயத்து ராஜ், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை,
யுனிவர்சல் பென்சன் திட்டத்திற்கு ஒப்புதல்
தொழிலாளர் துறை உள்ளிட்ட துறைகளில் ஊழியர்கள் நியமனம் தொடர்பாக 14 விதிமுறைகளை திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 37 பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக பாதுகாப்பு துறையின் பரிந்துரையை ஏற்று யுனிவர்சல் பென்சன் திட்டத்தை (UPS) அமல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெறுவதில் புதிய திருத்தம்
இதன்மூலம் தகுதி வாய்ந்த அனைத்து நபர்களும் ஓய்வூதியம் பெற முடியும். அதேசமயம் ஓய்வூதியம் பெறக்கூடியவர் அல்லது அவரின் அடுத்த குடும்ப உறுப்பினர் வருமான வரி செலுத்தும் வகையில் வருமானம் பெறக்கூடியவராக இருந்தாலோ அல்லது மத்திய, மாநில, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய நபராக இருந்தால் ஓய்வூதியம் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் 21ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில்,
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தவும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் அளிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் மத்திய அரசுக்கு ஆண்டிற்கு 9,488.70 கோடி ரூபாய் செலவு ஏற்படும். 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர் என்று கூறப்பட்டுள்ளது.