ஆப்நகரம்

பத்திரிகை ஆசிரியர் கொலை: தலையங்கத்தை தவிர்த்துப் போராட்டம்

ஜம்மு காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் ஷுஜத் புகாரி கொலையின் எதிரொலியாக முன்னணி நாளிதழ்கள் தலையங்கத்திற்கான இடத்தை வெறுமையாக விட்டு தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

Samayam Tamil 21 Jun 2018, 2:11 am
ஜம்மு காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் ஷுஜத் புகாரி கொலையின் எதிரொலியாக முன்னணி நாளிதழ்கள் தலையங்கத்திற்கான இடத்தை வெறுமையாக விட்டு தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.
Samayam Tamil shujaat-bukhari4-1024x489


ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளிவரும் நாளிதழான ரைசிங் காஷ்மீர் இதழின் ஆசிரியர் ஷுஜத் புகார். 50 வயதான இவரும் அவரது இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் ஜூன் 14ஆம் தேதி அலுவலக வாயிலில் கொல்லப்பட்டனர்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியாகும் பல்வேறு முன்னணி நாளிதழ்களும் பத்திரிகைகளும் புதன்கிழமை தங்கள் பத்திரிகையில் தலையங்கத்துக்கான இடத்தை வெறுமையாக விட்டிருந்தன.

காஷ்மீர் பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பின் சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “பத்திரிகையின் குரலாக விளங்குவது தலையங்கம்தான். அதனை வெறுமையாக விடுவதன் மூலம் எங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி