ஆப்நகரம்

கடுமையான பனிப்பொழிவால் உறைந்து போன தால் ஏரி!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக தால் ஏரி உறைந்து பனிக்கட்டியாக காட்சியளிக்கிறது.

Samayam Tamil 9 Jan 2018, 11:52 am
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக தால் ஏரி உறைந்து பனிக்கட்டியாக காட்சியளிக்கிறது.
Samayam Tamil jk srinagars dal lake freezes as mercury in the area continues to fall
கடுமையான பனிப்பொழிவால் உறைந்து போன தால் ஏரி!


இந்தியாவின் வடமாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வரலாற்று சிறப்பு மிக்க ஏரியான தால் ஏரி பனியால் உறைந்து போய் காணப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது அதிகபட்சமாக 11 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவி வருகின்றது. பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே வாகன ஓட்டிகள் பயணம் செய்து வருகின்றனர். கோடைக்காலம் திரும்பும் வரை பனி நிலவும் என்பதாம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் உறைந்து போய் காணப்படுகின்றது.

அடுத்த செய்தி