ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நிகழ்த்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில், ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும், 6 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
அங்குள்ள ஷோபியன் மாவட்டத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள், இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினரின் ரோந்து வாகனம் மீது சராமரியாக துப்பாக்கியால் சுட்டு, தாக்குதல் நடத்தினர். உடனே சுதாரித்துக் கொண்ட ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.
இருதரப்பும் மாறி மாறி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில், ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும், 6 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து, அங்கே ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு, தீவிரவாதிகளுடன் சண்டை நடைபெற்று வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருதரப்புக்கும் இடையிலான சண்டையில், பொதுமக்கள் சிலரும் சிக்கி காயமடைந்தனர் என்றும் கூறப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் தீவிரவாதிகள் ஊடுருவி, தாக்குதல் நடத்துவது இது 3வது முறையாகும்.
At least one Army jawan was killed and six others were injured after terrorists attacked a patrol party in Shopian district of Jammu and Kashmir early on Thursday.
அங்குள்ள ஷோபியன் மாவட்டத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள், இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினரின் ரோந்து வாகனம் மீது சராமரியாக துப்பாக்கியால் சுட்டு, தாக்குதல் நடத்தினர். உடனே சுதாரித்துக் கொண்ட ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.
இருதரப்பும் மாறி மாறி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில், ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும், 6 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து, அங்கே ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு, தீவிரவாதிகளுடன் சண்டை நடைபெற்று வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருதரப்புக்கும் இடையிலான சண்டையில், பொதுமக்கள் சிலரும் சிக்கி காயமடைந்தனர் என்றும் கூறப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் தீவிரவாதிகள் ஊடுருவி, தாக்குதல் நடத்துவது இது 3வது முறையாகும்.
At least one Army jawan was killed and six others were injured after terrorists attacked a patrol party in Shopian district of Jammu and Kashmir early on Thursday.