ஆப்நகரம்

"மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம்" : வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு..!

டெல்லி பல்கலைகழக ஆய்வு மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் குறித்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

TNN 15 Mar 2017, 11:49 am
டெல்லி பல்கலைகழக ஆய்வு மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் குறித்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Samayam Tamil jnu student muthu krishnan death case filled under pcr act
"மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம்" : வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு..!


நேற்று முன் தினம் டெல்லி பல்கலைகழக ஆய்வு மாணவரான தமிழகத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். ஆனால் முத்துகிருஷ்ணனில் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் தற்கொலை செய்யும் அளவிற்கு மனநிலை கொண்டவர் இல்லை எனவும் அவரின் நண்பர்களும், சக மாணவர்களும் கூறி வந்தனர்.எனவே முத்துக்கிருஷ்ணன் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று டெல்லிக்கு வந்த முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம்,தனது மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும்,எனவே இது குறித்து தாழ்த்தப்பட்டோர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் வசந்த விகார் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

ஆனால் யார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்? என குறிப்பிட்டால் மட்டுமே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை வசந்த விகார் காவல் நிலையத்திற்கு வந்த முத்துக்கிருஷ்ணனின் தந்தை மற்றும் டெல்லி பல்கலைகழக மாணவர்கள், முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் ஜே.என்.யு பல்கலைகழக நிர்வாகம் மற்றும் வேந்தர் மீது சந்தேகம் இருப்பதாகவும் , எனவே அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதனிடையே தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் முத்துகிருஷ்ணனின் தந்தையை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சந்திப்பு நிகழ்ந்த சில மணி நேரங்களில் முத்துக்கிருஷ்ணன் மரணம் குறித்த வழக்கானது 2015-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

JNU Student Muthu Krishnan death case filled under PCR act

அடுத்த செய்தி