ஆப்நகரம்

ஜே.என்.யு மாணவர் மாயமான விவகாரம்: இந்தியா கேட் முன்பு ஆர்ப்பாட்டம்

ஜே.என்.யு மாணவர் மாயமான விவகாரம் தொடர்பாக, இந்தியா கேட் முன்பு அப்பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

TNN 6 Nov 2016, 4:45 pm
டெல்லி: ஜே.என்.யு மாணவர் மாயமான விவகாரம் தொடர்பாக, இந்தியா கேட் முன்பு அப்பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil jnu students protest against govt over missing student najeebahmed
ஜே.என்.யு மாணவர் மாயமான விவகாரம்: இந்தியா கேட் முன்பு ஆர்ப்பாட்டம்


டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி பிரிவில் பயின்று வந்த மாணவர் நஜீப் அகமது. இவர் கடந்த மாதம் 15ஆம் தேதி மாயமானார். இவரை கண்டுபிடித்து தரக்கோரி பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Delhi: JNU students protest against govt over missing JNU student #NajeebAhmed near India Gate pic.twitter.com/yj1TCzKy9M — ANI (@ANI_news) November 6, 2016 இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சிறப்பு விசாரணைக்குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மாயமான மாணவரைக் கண்டுபிடித்து தரக்கோரி, இந்தியா கேட் முன்பு ஜே.என்.யூ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.

Delhi: JNU students protest against govt over missing JNU student #NajeebAhmed near India Gate.

அடுத்த செய்தி