ஆப்நகரம்

ஜெஎன்யு மாணவர்கள் உமர் காலித், அனிர்பன்‌ பட்டாச்சார்யா சரண்

நேற்றிரவு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் உமர் காலித், அனிர்பன்‌ பட்டாச்சார்யா ஆகியோர்காவல்துறையினரிடம் சரணடைந்தனர்

TNN 24 Feb 2016, 8:40 am
டெல்லி: நேற்றிரவு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் உமர் காலித், அனிர்பன்‌ பட்டாச்சார்யா ஆகியோர் டெல்லி காவல்துறையினரிடம் சரணடைந்தனர்.
Samayam Tamil jnu students umar khalid and anirban bhattacharya surrender to delhi police
ஜெஎன்யு மாணவர்கள் உமர் காலித், அனிர்பன்‌ பட்டாச்சார்யா சரண்


தேச விரோத குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த தேச விரோத குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் உமர் காலித், அனிர்பன்‌ பட்டாச்சார்யா ஆகியோர் டெல்லி போலீசாரிடம் நேற்றிரவில் சரணடைந்தனர்.

டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, உமர் காலித், அனிர்பன்‌ பட்டாச்சார்யா ஆகிய மாணவர்கள் நள்ளிரவில் சரணடைந்தனர். தெற்கு வளாக காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அவர்கள், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

#OmarKhalid and Anirban Bhattacharya surrender: ACP KP Kukreti arrives at South Campus PS amid tight security pic.twitter.com/rg1EwBBlqj— ANI (@ANI_news) February 23, 2016

நேற்றிரவு இந்த மாணவர்கள் சரணடைய வந்த பொது, மிக அதிக பாதுகாப்பு ஏற்பட்டுகள் செய்யப்பட்டிருந்தது. சரணடைய வந்த மாணவர்களை பத்திரிக்கையாளர்கள் சந்திக்க அல்லது படம் எடுப்பதை தடுக்க மற்ற ஜெஎன்யு மாணவர்கள் அரணாக நின்றனர்.

ஜெஎன்யு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் கன்ஹையா குமார் உள்பட 6 பேர் நாட்டிற்கு விரோதமாக முழக்கங்கள் எழுப்பியதாக அவர்கள் மீது தேச விரோத குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன், தலைநகர் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட தினத்தை துக்க தினமாக சில மாணவர்கள் கடைப்பிடித்தனர். அப்போது, அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டதாக மாணவர் சங்கத் தலைவர் கன்ஹையா குமார் உள்ளிட்ட 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி