ஆப்நகரம்

ஜே.என்.யூ. தாக்குதல்: வன்முறையாளர்கள் புகைப்படத்தை வெளியிட்ட டெல்லி போலீஸ்!

டெல்லி ஜவர்ஹர்லால் பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியவர்களின் புகைப்படங்களை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர் அதில் மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷி கோஷின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது

Samayam Tamil 10 Jan 2020, 6:19 pm
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil ஆயிஷி கோஷ்
ஆயிஷி கோஷ்


டெல்லி ஜவர்ஹர்லால் பல்கலைக்கழகத்தில் இடதுசாரி, தலித் மாணவ அமைப்புகளை முடக்கும் வகையில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது தீவிரம் அடைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வந்ததற்கிடையே, பல்கலைக்கழகத்தின் பெண்கள் தங்கும் விடுத்திக்குள் நுழைந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஆயுதங்களை கொண்டு கொடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் மாணவர் சங்கத் தலைவி ஆயிஷி கோஷ் உள்பட பலர் படுகாயமடைந்தனர். விடுதியும் சூறையாடப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பெண் அமைப்பினர் என ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முகமூடி அணிய வேண்டியதன் அவசியம் என்ன? உத்தவ் தாக்கரே கேள்வி

பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) இந்த தாக்குதலை நடத்தியதாக ஜே.என்.யூ. மாணவர் அமைப்பும், இடதுசாரிகள் மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி வந்த நிலையில், மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு இந்து ரக்‌ஷா தளம் அமைப்பினர் பொறுப்பேற்றனர்.

ஜேஎன்யூ துணைவேந்தரை பதவியிலிருந்து தூக்கணும்: கொத்தளிக்கும் பாஜக மூத்த தலைவர்!!

இந்த சம்பவம் குறித்து விசாரித்து வந்த டெல்லி போலீசார், கணினி சர்வர்கள் சேதமடைந்துள்ளதால் சிசிடிவி காட்சிகள் கிடைக்க பெறவில்லை என கூறி வந்தனர். ஆனால், முகமூடி அணிந்த கும்பல் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

கொடூரமாக தாக்கப்பட்ட ஜே.என்.யூ. மாணவ சங்கத் தலைவியுடன் கனிமொழி சந்திப்பு

இந்நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது. சுன்சுன் குமார், பங்கஜ் மிஸ்ரா, ஆயிஷி கோஷ், வஸ்கர் விஜய், சுச்சேட்டா டலுக்தர், பிரியா ரஞ்சன், டோலன் சமந்தா, யோகேந்திர பரத்வாஜ், விகாஸ் பேட் ஆகிய 9 பேரின் புகைப்படங்களை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.


இதில் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சங்கத் தலைவி ஆயிஷி கோஷின் புகைப்படமும் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளானவர்களையே குற்றவாளிகள் என நிரூபிக்க டெல்லி காவல்துறை முயற்சி மேற்கொண்டு வருவதாக ஏராளமானோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து ஆயுஷி கோஷ் கூறுகையில், “டெல்லி போலீசார் அவர்கள் விசாரணையை தொடரட்டும். நான் எப்படி தாக்கப்பட்டேன் என்று காண்பிக்க என்னிடமும் ஆதாரம் உள்ளது. எவ்வித வன்முறையிலும் நான் ஈடுபடவில்லை. எந்த அடிப்படையில் போலீசார் இதனை வெளியிட்டுள்ளனர் என தெரியவில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. எதற்கும் பயப்படப்போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி