ஆப்நகரம்

சுவையான ’கோவிட் கறி’, ’மாஸ்க் நான்’ ரெடி - சாப்பிட வரலாம் வாங்க!

புதுமையான உணவுப் பொருட்களைத் தயாரித்து மக்களைக் கவரும் உணவகங்கள் கொரோனா வைரஸையும், அதைத் தடுக்க பயன்படுத்தும் மாஸ்க்கையும் விட்டுவைக்கவில்லை.

Samayam Tamil 3 Aug 2020, 6:04 am
உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. உடல் நலனை மட்டுமின்றி பல்வேறு தொழில்துறையையும் முடக்கி போட்டுள்ளது. இருப்பினும் உணவகங்களில் பணியாற்றும் செஃப்கள் தங்கள் கற்பனைத் திறனுக்கு மட்டும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ’வேதிக்’ என்ற சைவ உணவகம் ஒன்றில் புதுமையான வடிவங்களில் உணவு தயாரித்து வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கின்றனர். இவர்களது மெனு கார்டில் சமீபத்தில் இணைந்த உணவுகள் ‘கோவிட் கறி’ மற்றும் ‘மாஸ்க் நான்’ ஆகியவை ஆகும்.
Samayam Tamil Covid Curry and Mask Naan


உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்று முக்கியமான பேசுபொருளாக இருக்கிறது. இதனை வராமல் தடுக்க அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டின் வடிவங்களைக் கொண்டு வழக்கமான உணவில் மாற்றம் செய்து அசத்தியுள்ளனர். இது பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் இதையும் ஒருபிடி பிடித்துவிட வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் நினைப்பதில் தவறில்லை.

"சத்தான வெட்டுக்கிளி பிரியாணி, வெட்டுக்கிளி ஃப்ரை சாப்பிட வாங்க"

குறிப்பாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பலரும் உணவகங்களுக்கு வர மறுக்கின்றனர். போதிய சரீர இடைவெளியுடன் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடலாம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டாலும் மக்கள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்களை ஈர்ப்பதற்காக இப்படி வித்தியாசமான முறைகளை உணவக உரிமையாளர்கள் கையில் எடுத்துள்ளனர்.

அதேசமயம் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தவறவில்லை. இதுபற்றி வேதிக் உணவகத்தின் உரிமையாளர் அனில் கூறுகையில், ‘கோவிட் கறி’ சுத்தமான ஜெயின் டிஷ். இதில் ஜோத்பூரின் சிறப்புமிக்க மலாய் கோஃப்டா கறி இடம்பெற்றுள்ளது. இந்த உணவு வழக்கமாக வட்டமான வடிவில் தயாரிக்கப்படும். தற்போது கொரோனா வைரஸின் வடிவில் செய்துள்ளோம்.

நாயிடமிருந்து ஐஸ்கிரீமை காக்க, 4 பேரைக் காரால் ஏற்றிய பெண்...

மேலும் முகக்கவச வடிவிலும் உணவை தயரித்திருக்கிறோம். ’கோவிட் கறி’ விலை ரூ.220 ஆகும். ‘மாஸ்க் நான்’ விலை ரூ.40 ஆகும். புதுமையாக ஏதாவது செய்து மக்களை உணவகத்திற்கு அழைத்து வர நினைத்தோம். அந்த முயற்சிக்கு கிடைத்த பலன் தான் இது. அரசு வலியுறுத்தியுள்ள அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் எங்கள் உணவகத்தில் செய்துள்ளோம் என்றார்.

இந்த புதுமையான உணவு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. முன்னதாக வெட்டுக்கிளிகள் இந்தியாவில் அதிகளவில் படையெடுத்த போது இதே ராஜஸ்தானில் தான் வெட்டுக்கிளி பிரியாணியை அறிமுகப்படுத்தி ஒட்டுமொத்த நாட்டையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

அடுத்த செய்தி