ஆப்நகரம்

நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை: சர்வாதிகாரி ஸ்டாலினால் கொல்லப்பட்டார்: சு.சுவாமி!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்வாதிகாரி ஸ்டாலினால் கொல்லப்பட்டார் என்று சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Sep 2018, 4:08 pm
இந்திய சுதந்திர போராட்ட வீரரனா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், விமான விபத்தில் இறக்கவில்லை என்றும், சர்வாதிகாரி ஸ்டாலினால் கொல்லப்பட்டார் என்றும் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 66010714
நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை: சர்வாதிகாரி ஸ்டாலினால் கொல்லப்பட்டார்: சு.சுவாமி!


திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

1945-ம் ஆண்டு நேதாஜி விமான விபத்தில் உயிரிழந்தார் என பரப்பட்ட தகவல் நேரு மற்றும் ஜப்பானின் கூட்டு சதித்திட்டம். அப்போதயை சோவியத் யூனியனில் தங்குவதற்கு இடம் தேடிய நேதாஜிக்கு, சர்வாதிகாரி ஸ்டாலின் தஞ்சமடைய அனுமதியளித்தார்.

பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஸ்டாலின் உத்தரவால் கொல்லப்பட்டார். இதைப் பற்றிய அனைத்து விவரங்களும் முன்னாள் பிரதமர் நேருவுக்கு தெரியும்.

75 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூரில் நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசாங்கம் அமைக்கப்பட்டது தான் இந்தியாவிற்கு ஆங்கிலேயர்கள் சுதந்திரம் வழங்க முக்கிய காரணம்.

இந்த தகவலை பிரிட்டன் முன்னாள் பிரதமர் க்ளீமண்ட் அட்லீஸ் 1948-ம் ஆண்டு இந்தியா வந்த போது அவரே ஒப்புக்கொண்டுள்ளார். இவ்வாறு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறினார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், 1945 ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி விமான விபத்தில் 48-ஆவது வயதில் உயிரிழந்ததாக ஜப்பான் அரசு அறிவித்தது. ஆனாலும், இவருடைய மரணம் குறித்துப் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன.

இந்நிலையில் நேதஜி சுபாஷ் சந்திரபோஸ், சோவியத் யூனியன் சர்வாதிகாரி ஸ்டாலினால் கொலை செய்யப்பட்டார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி