ஆப்நகரம்

கன்னியாஸ்திரி வழக்கில் கைதான பேராயர் பிராங்கோவுக்கு அக்டோபர் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல்

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிஷப் பிராங்கோவுக்கு கேரளா நீதிமன்றம் அக்டோபர் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்துள்ளது.

Samayam Tamil 24 Sep 2018, 6:14 pm
கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பேராயர் பிராங்கோவுக்கு அக்டோபர் 6ம் தேதி நீதிமன்ற காவல் வழங்கி கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil divya_15918_bishop
பேராயர் பிராங்கோவுக்கு அக்டோபர் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல்


கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் பேராயராக இருக்கும் பிராங்கோ மூலக்கல் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இது அம்மாநிலம் முழுவதும் பரபரப்பை கிளப்பியது.

குருவிளங்காடு காவல்நிலையத்தில் கன்னியாஸ்திரி அளித்த புகாரில், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை சுமார் 13 தடவை பேராயர் பிராங்கோ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பேராயரை பிராங்கோவை கைது செய்யக்கோரி கேரளா திருவனந்தபுரத்தில் கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டம் ஆரம்பித்தனர். அதை தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

பிரச்னையின் வீரியத்தை உணர்ந்த கேரளா மாநில காவல்துறை, பஞ்சாப் சென்று பேராயர் பிராங்கோவை கேரளா அழைத்து வந்தனர். அதை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை போலீஸார் காவலில் எடுத்தனர்.

இந்த நிலையில், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரை அக்டோபர் 6-ம் தேதி வரை பிராங்கோவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும்27ம் தேதிக்கு ஒத்திவைத்து கேரளா மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அடுத்த செய்தி