ஆப்நகரம்

தீபிகா படுகோன்: குறை சொல்லாதீர்கள்... நீங்கள் என்ன செய்தீர்கள் - நடிகை ஜூஹி சாவ்லா விளாசல்

நான் சொல்ல விரும்பியதை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'பத்மாவத்' படம் வெளியானபோது சொன்னேன். ​​இன்று நான் காண்பது எனக்கு வேதனை அளிக்கிறது. தொடர்ந்து எனக்கு வரும் மிரட்டல்களுக்கு ஒருநாளும் அஞ்சப்போவதில்லை

Samayam Tamil 9 Jan 2020, 7:55 pm
தீபிகா படுகோனே நடித்து இன்று (ஜன., 9) திரைக்கு வந்துள்ள திரைப்படம் சப்பாக். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட புதுடெல்லியைச் சேர்ந்த பெண்ணான லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கைச் சம்பவங்களைத் தழுவி இப்படம் உருவாகி உள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படத்தின் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் ஆதங்கப்பட்டு கண்ணீர் வடித்தார் தீபிகா படுகோனே.
Samayam Tamil juhi chawla


இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மற்றும் கல்லூரிக்கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்துப் போராடி வரும் டெல்லி ஜே.என்.யூ. பல்கலை. மாணவர்களை முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத மர்ம கும்பல் தாக்கியதற்குக் கண்டனம் தெரிவித்தார்.

அதோடு மட்டுமல்லாமல், மாணவர்களை நேரில் சென்றும் சந்தித்து ஆறுதல் சொன்னார். இப்படி, திடீரென போராட்டாக்காரர்களுக்கு ஆதரவாக தீபிகா செயல்பட்டது, சப்பாக் திரைப்படத்திற்கு மாணவர்களிடம் ஆதரவு திரட்டவே இப்படி செய்ததாக விமர்சனம் எழுந்தது.

மேலும் சப்பாக் படத்தை புறக்கணிக்க வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் தனியடைவு (அட ஹேஷ்டேகுங்க) ட்விட்டரில் பிரபலமானது.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது பதிலளித்த தீபிகா, “நான் சொல்ல விரும்பியதை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'பத்மாவத்' படம் வெளியானபோது சொன்னேன். இன்று நான் காண்பது எனக்கு வேதனை அளிக்கிறது. தொடர்ந்து எனக்கு வரும் மிரட்டல்களுக்கு ஒருநாளும் அஞ்சப்போவதில்லை”எனத் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், இந்தி நடிகை ஜுஹி சாவ்லா, “ தொடர்ந்து அரசைக் குறைசொல்லி வரும் நீங்கள், உங்களை எப்போது கேள்வி கேட்டுக் கொள்ளப்போகிறீர்கள். நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர் தோல்விக்குப் பிறகு சூர்யாவின் சூரரைப்போற்று வெளியாகும் நேரம், அகரம் மூலம் படித்த மாணவியின் பேச்சு வெளியாவதும், சப்பாக் வெளியாகும் நேரத்தில் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் தீபிகா இப்படி நடந்து கொள்வதும் வெறும் விளம்பர உத்திகள் தான். மற்றபடி இவர்களுக்கு அக்கறையெல்லாம் ஒன்றும் கிடையாது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்தன. இந்நிலையில், தீபிகாவின் இந்த பதில், மேலும் மேலும் அரசியலாக்கப்படாமல் இருந்தால் நலம்.

அடுத்த செய்தி