குழந்தைகள் பார்த்து ரசிக்கும் கார்டூன் சேனல்களில் நொறுக்குத்தீனி, குளிர்பான விளம்பரங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கார்ப்ரேட் நிறுவனங்களின் உணவுத்தயாரிப்புகளில் பல்வேறு கெமிக்கல் மற்றும் செயற்கை சுவையூட்டிகளை பயன்படுத்துவதாகவும், இது உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடியது என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் மாநில தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ராஜயவர்தன் சிங் ரத்தோர் பேசுகையில், குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கார்டூன் சேனலில் குளிர்பானம் மற்றும் நொறுக்குத்தீனிகளின் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கோலா பானங்களும் சில நொறுக்குத்தீனி ஸ்நாக்ஸ் ஐட்டங்களினாலும் ஏற்படும் தீமைகளை வீட்டிலிருந்தே பரிசோதிக்கும் பல முறைகள் சமூக வலைதளங்களில் காணலாம்.
கோலா பானங்களை ஸ்ப்ரே மூலம் செடிகளில் தெளித்தால், அதில் இருக்கும் பூச்சிகள் இறந்து விடுகின்றன. இதே போல் பிரபல நொறுக்குத்தீனிகளை தீயில் காட்டும் போது அது உருகி பிளாஸ்டிக் தன்மை வெளிப்படுவதையும் காணலாம்.
கார்ப்ரேட் நிறுவனங்களின் உணவுத்தயாரிப்புகளில் பல்வேறு கெமிக்கல் மற்றும் செயற்கை சுவையூட்டிகளை பயன்படுத்துவதாகவும், இது உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடியது என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் மாநில தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ராஜயவர்தன் சிங் ரத்தோர் பேசுகையில், குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கார்டூன் சேனலில் குளிர்பானம் மற்றும் நொறுக்குத்தீனிகளின் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கோலா பானங்களும் சில நொறுக்குத்தீனி ஸ்நாக்ஸ் ஐட்டங்களினாலும் ஏற்படும் தீமைகளை வீட்டிலிருந்தே பரிசோதிக்கும் பல முறைகள் சமூக வலைதளங்களில் காணலாம்.
கோலா பானங்களை ஸ்ப்ரே மூலம் செடிகளில் தெளித்தால், அதில் இருக்கும் பூச்சிகள் இறந்து விடுகின்றன. இதே போல் பிரபல நொறுக்குத்தீனிகளை தீயில் காட்டும் போது அது உருகி பிளாஸ்டிக் தன்மை வெளிப்படுவதையும் காணலாம்.