ஆப்நகரம்

சசிகலாவை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் விரைவில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

TNN 10 May 2017, 4:52 pm
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் விரைவில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
Samayam Tamil justice pinaki chandra ghose retires on may 27
சசிகலாவை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு


ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான பினாகி சந்திர கோஷ் இம்மாத இறுதியில் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

நீதிபதி பினாகி சந்திர கோஷ், நீதிபதி அமித்வா ராயுடன் இணைந்து இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பில் நால்வரும் குற்றவாளிகள் என்பது உறுதிசெய்யப்பட்டனர்.

20 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கிய, நீதிபதி கோஷ் மே, 27 ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றி வரும் இவர், மறைந்த கொல்கத்தா தலைமை நீதிபதி சாம்பு சந்திர கோஷ் அவர்களின் மகன் ஆவார்.

கோஷ் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு இன்று அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில், தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி