ஆப்நகரம்

உச்சநீதிமன்ற நீதிபதியாக ரஜ்சன் கோகாய் நியமனம், அக்.3ம் தேதி பதவியேற்பு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஜ்சன் கோகாயை நியமனம் செய்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளாா்.

Samayam Tamil 13 Sep 2018, 8:16 pm
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஜ்சன் கோகாயை நியமனம் செய்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளாா்.
Samayam Tamil Ranjan Kogoi


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்கும் தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் அக்டோபா் 2ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. இதனைத் தொடா்ந்து உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக இரண்டாம் நிலை பொறுப்பில் உள்ள ரஜ்சன் கோகாயின் பெயரை தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்தாா்.

மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு காலத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து தற்போதைய நீதிபதியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்பட்டது.


இந்நிலையில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஜ்சன் கோகாயை நியமனம் செய்து அறிவித்துள்ளாா். மேலும் ரஜ்சன் கோகாய் அக்டோபா் 3ம் தேதி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளாா்.

அடுத்த செய்தி