ஆப்நகரம்

புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அக்., 3ல் பதவியேற்பு

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி ரஞ்சன் கோகாய் அக்டோபர் 3ஆம் தேதி பதவியேற்க இருக்கிறார்.

Samayam Tamil 2 Sep 2018, 8:50 am
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி ரஞ்சன் கோகாய் அக்டோபர் 3ஆம் தேதி பதவியேற்க இருக்கிறார்.
Samayam Tamil Ranjan_Gogoi-Chief_Justice_of_India_0.


தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து அவருக்கு அடுத்த நிலையில் உள்ள ரஞ்சன் கோகாய் பெயரை தீபக் மிஸ்ரா அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

இதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக அக்டோபர் 3ஆம் தேதி பதவியேற்கிறார் ரஞ்சன் கோகாய். அவர் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரை பதவியில் இருப்பார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் கோகாய் அம்மாநில முன்னாள் முதல்வர் கேஷப் சந்திர கொகோயின் மகன். பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக இருந்த கோகாய் 2012ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

அடுத்த செய்தி