ஆப்நகரம்

தெலுங்கானா முதல்வராக நாளை பதவியேற்கும் சந்திரசேகரராவ்!

தெலுங்கானா மாநில முதல்வராக நாளை சந்திரசேகர ராவ் 2ஆவது முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 12 Dec 2018, 9:48 am
நடந்து முடிந்த தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் ராஷ்டிரிய சமிதி கட்சி (ஆர்எஸ்) தலைவர் சந்திரசேகர ராவ் 51 ஆயிரம் வாக்குகள் வித்தயாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நாளை அவர் 2ஆவது முறையாக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil rao


மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் 88 இடங்களில் டிஆர்.எஸ் கட்சி வெற்றி பெற்றது. தொடர்ந்து 21 இடங்களை காங்கிரஸ் மற்றும் ஒரு இடத்தை பாஜகவும் கைப்பற்றியது.

Also Read This: தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்: மீண்டும் டிஆர்எஸ் ஆட்சி

இந்த நிலையில், 88 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்ற டிஆர்.எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் 2 ஆவது முறையாக முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார். இவரது பதவி ஏற்பு விழா நாளை நடைபெறும் என்று கூறப்படுகிறது. எனினும், பதவியேற்பு விழா நேரம், இடம் உள்ளிட்ட தகவல்கல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி