ஆப்நகரம்

ஜல்லிக்கட்டுகாக காத்திருக்கும் கம்பாலா!

ஜல்லிக்கட்டு வழக்கில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை பொறுத்திருக்க, கர்நாடகா ஐகோர்ட் முடிவு செய்துள்ளது. இதனால் கம்பாலா எருது போட்டி மீதான தடை, மேலும் நீடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

TOI Contributor 31 Jan 2017, 3:57 am
பெங்களுரு: ஜல்லிக்கட்டு வழக்கில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை பொறுத்திருக்க, கர்நாடகா ஐகோர்ட் முடிவு செய்துள்ளது. இதனால் கம்பாலா எருது போட்டி மீதான தடை, மேலும் நீடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil kambala waits for jallikattu judgement
ஜல்லிக்கட்டுகாக காத்திருக்கும் கம்பாலா!


தமிழகத்தில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மாநிலம் முழுதும் மாணவர்கள் போராட்டம், நாட்டையே உலுக்கியது. இதற்கு வெற்றியாக ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசின் உதவியுடன், தமிழக சட்டசபையில் சட்டம் இயற்றப்பட்டது.

இதை தொடர்ந்து, கர்நாடகாவிலும் கம்பாலா எருது போட்டி மீதான தடையை நீக்க கோரி, போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில், இந்த வழக்கு, கர்நாடகா மாநில ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தலைமை நீதிபதி, சுப்ரோ கமால் கூறியது: ஜல்லிக்கட்டு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதன் தீர்ப்பு வெளியாவதை பொறுத்து, கம்பாலா மீதான தடை வழக்கின் தீர்ப்பு முடிவு செய்யப்படும்.

அதனால் வழக்கு, இரு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி கூறினார். ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

அடுத்த செய்தி