ஆப்நகரம்

காவிரி தீர்ப்பு பற்றி பேசிய ரஜினியின் உருவ பொம்மை எரிப்பு

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினியின் உருவ பொம்மையை எரித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

Samayam Tamil 17 Feb 2018, 12:01 pm
பெங்களூரு: காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினியின் உருவ பொம்மையை எரித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
Samayam Tamil kannada protesters burn rajini effigy after his opinion on cauvery water issue verdict
காவிரி தீர்ப்பு பற்றி பேசிய ரஜினியின் உருவ பொம்மை எரிப்பு


காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இறுதித் தீர்ப்பு வழங்கியது. இதில் தமிழகத்திக்கு 14.75 டி.எம்.சி. நீர் குறைக்கப்பட்டு அதனை கர்நாடகாவுக்கு வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், "உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளது. இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது" என்று குறிப்பிட்டார்.

ரஜினியின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பல்வேறு தரப்பினர் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். சன்னப்பட்னா நகரில் ரஜினியின் உருவ பொம்மை மற்றும் படத்தை எரித்து கன்னட அமைப்பினர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அடுத்த செய்தி