ஆப்நகரம்

யார் இந்த 'தங்க பாபா’? இத்தனை கிலோ நகைகள் உடன் யாத்திரை செல்வதன் பின்னணி...!

கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து கொண்டு, தங்க பாபா தனது யாத்திரை நடப்பாண்டிலும் மேற்கொண்டார்.

Samayam Tamil 29 Jul 2019, 2:51 pm
தமிழகத்தில் ஆடி எனப்படும் மாதம், வட மாநிலங்களில் சிரவண மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் கன்வர் யாத்திரை நடைபெறும். அப்போது சிவ பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீரை சேகரித்துக் கொண்டு, சிவாலயங்களுக்கு எடுத்து வந்து அபிஷேகம் செய்வர்.
Samayam Tamil Golden Baba


இதில் சுதீர் மக்கார் என்ற சாமியாரும் கலந்து கொள்வார். ஆனால் தனது உடல் முழுவதும் 20 கிலோ நகைகளைச் சூடிக் கொண்டு, யாத்திரையில் ஈடுபடுவார். இதன் காரணமாக சீடர்களால் ’தங்க பாபா’ என்று அழைக்கப்படுகிறார்.

இளம் வயதில் சுதீர் மக்கார் வறுமையில் வாடியுள்ளார். அதன்பின்னர் ஜவுளி வியாபாரம் செய்தார். அதில் நல்ல லாபம் ஏற்பட்டு பணக்காரர் ஆனார். தொடர்ந்து 26 ஆண்டுகளாக கன்வர் யாத்திரையை கிலோ கணக்கில் தங்க நகைகளுடன் சுதீர் மக்கார் மேற்கொண்டு வருகிறார்.

அவர் மட்டுமல்லாமல் 300 சீடர்களையும் அழைத்துச் செல்வார். இவரது கைகளில் தங்க காப்புகள், பத்து விரல்களில் மோதிரம், கழுத்தில் தங்க சங்கிலிகள், பதக்கம் போன்றவற்றுடன் வலம் வருகிறார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதில் வென்ற எடியூரப்பா- கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி!

இதையொட்டி போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் உடல்நலப் பிரச்சனை காரணமாக, 20 கிலோ நகைகளுக்கு பதிலாக 16 கிலோ நகைகள் மட்டுமே அணிந்து வந்துள்ளார்.

சக்தி மிக்க இந்தியர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி , மோடி முதலிடம்!

இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே யாத்திரை மேற்கொள்ள வேண்டாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் சீடர்களின் வற்புறுத்தலால் கன்வர் யாத்திரைக்கு வந்தேன்.

ஹைதராபாத்தில் மயிரிழையில் விபத்திலிருந்து தப்பிய மெட்ரோ ரயில்!

இந்த ஆண்டோடு மொத்தம் எனது யாத்திரை 26 ஆண்டுகளை எட்டியுள்ளது. நான் அணிந்துள்ள நகைகள் அனைத்தும், எனது சொந்த செலவில் வாங்கப்பட்டவை என்று கூறினார்.

அடுத்த செய்தி