ஆப்நகரம்

கெஜ்ரிவால் மீது ஊழல் புகார்- செய்தியாளர்கள் சந்திப்பில் மயங்கி விழுந்த கபில் மிஸ்ரா!

அர்விந்த் கெஜ்ரிவால் மீது ஊழல் புகார் கூறும் முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா, அதற்கான ஆதாரங்களை வெளியிடும் செய்தியாளர்கள் சந்திப்பில் திடீரென மயங்கிவிழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

TNN 14 May 2017, 1:01 pm
அர்விந்த் கெஜ்ரிவால் மீது ஊழல் புகார் கூறும் முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா, அதற்கான ஆதாரங்களை வெளியிடும் செய்தியாளர்கள் சந்திப்பில் திடீரென மயங்கிவிழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil kapil mishra faints during press meet while briefing on kejriwal corruption
கெஜ்ரிவால் மீது ஊழல் புகார்- செய்தியாளர்கள் சந்திப்பில் மயங்கி விழுந்த கபில் மிஸ்ரா!


ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் கபில் மிஸ்ரா. இவர் டெல்லி அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஆனால், கெஜ்ரிவால் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதை நேரில் பார்த்தேன் என்றும், அதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன் என்றும், கபில் மிஸ்ரா கூறிவருகிறார். இதன்படி, இன்று கெஜ்ரிவால் மீதான ஊழல் புகார்களுக்கு, ஆதாரங்களை சமர்ப்பிக்க உள்ளதாகக் கூறி, செய்தியாளர் சந்திப்புக்குக் கபில் மிஸ்ரா, அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், இந்த சந்திப்பின்போது சில ஆவணங்களை செய்தியாளர்களிடம் காட்டிய கபில் மிஸ்ரா, கெஜ்ரிவால் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றினார் என்றும், தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்தார் என்றும் பேசினார். மேலும், அதற்கான ஆதாரங்களை எழுந்து நின்று காட்டிய மிஸ்ரா, திடீரென மயங்கி விழுந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கபில் மிஸ்ராவை, அவரது ஆதரவாளர்கள் மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர்.


செய்தியாளர்கள் சந்திப்பில் மயங்கி விழுந்தார் கபில் மிஸ்ரா- கெஜ்ரிவால் பற்றிய ஊழல் ஆதாரங்களை வெளியிடும்போது பரிதாபம்! #KapilMishra #Kejriwal pic.twitter.com/2is0WTFnsI — Samayam Tamil (@SamayamTamil) May 14, 2017

அடுத்த செய்தி