ஆப்நகரம்

இந்திய கடற்படை புதிய தளபதியாக கரம்பிர் சிங் நியமனம்

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கரம்பிர் சிங் (Karambirsingh) நியமிக்கப் பட்டுள்ளார். கடற்படை தளபதியாக இருக்கும் சுனில் லம்பாவின் 3 ஆண்டு பதவிக்காலம் வரும் மே 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் தற்போது கிழக்குப்பகுதி தளபதியாக பொறுப்பு வகிக்கும் கரம்பிர் சிங், புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 23 Mar 2019, 5:35 pm
இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கரம்பிர் சிங் (Karambirsingh) நியமிக்கப் பட்டுள்ளார்.
Samayam Tamil dsds


கடற்படை தளபதியாக இருக்கும் சுனில் லம்பாவின் 3 ஆண்டு பதவிக்காலம் வரும் மே 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் தற்போது கிழக்குப்பகுதி தளபதியாக பொறுப்பு வகிக்கும் கரம்பிர் சிங், புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

38 ஆண்டுகளாக இந்திய கடற்படையில் பணியாற்றி வரும் கரம்பிர் சிங், அதி விஷிட் சேவா, பரம்விஷிட் சேவா உள்ளிட்ட விருதுகளையும் பெற்று இருக்கிறார். சுனில் லன்பா ஓய்வு பெற்ற பின், நாட்டின் 24-வது கடற்படை தளபதியாக கரம்பிர் சிங் பதவியேற்க இருக்கிறார்.

விசாகப்பட்டினத்தில் கிழக்கு நேவல் கமாண்டராக பணியாற்றி உள்ளார் கரம்சிங்.

கடக்வாஸ்லாவில் நேஷனல் டிஃபென்ஸ் அக்காடமியில் விமான மற்றும் கப்பல் இயக்கம் குறித்த பயிற்சிகள் பெற்றவர்.

அடுத்த செய்தி