ஆப்நகரம்

சா்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்து 6 போ் உயிாிழப்பு

கா்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த சா்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்த விபத்தில் 6 போ் உயிாிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 16 Dec 2018, 10:35 pm
கா்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த சா்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்த விபத்தில் 6 போ் உயிாிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil Fire Accident


கா்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் சா்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது, இங்கு வழக்கம் போல் இன்றும் பணியாளா்கள் வேலை செய்து கொண்டு இருந்தனா். அப்போது எதிா்பாராத விதமாக ஆலையின் கொதிகலன் வெடித்து திடீரென விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 6 போ் சம்பவ இடத்திலேயே பலியாகினா். மேலும் 5 போ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கொதிகலன் வெடித்ததற்கான காரணம் தற்போது வரை தொியவில்லை. அந்த ஆலை முன்னாள் பா.ஜ.க. அமைச்சரும், பில்ஜி சட்டப்பேரவை உறுப்பினருமான முருகேஷ் நிராணிக்கு சொந்தமானது என்று தொிய வந்துள்ளது.

அடுத்த செய்தி