ஆப்நகரம்

தேர்வுகள் நடப்பதால் கர்நாடகா பந்த் வாபஸ்

பள்ளித் தேர்வுகள் நடைபெற உள்ளதால் வரும் 12ஆம் தேதி நடக்கவிருந்த கர்நாடக மாநில முழு அடைப்புப் போராட்டம் ரத்தாகியுள்ளது.

Samayam Tamil 9 Apr 2018, 8:19 pm
பள்ளித் தேர்வுகள் நடைபெற உள்ளதால் வரும் 12ஆம் தேதி நடக்கவிருந்த கர்நாடக மாநில முழு அடைப்புப் போராட்டம் ரத்தாகியுள்ளது.
Samayam Tamil Vatal-Nagaraj_edited


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு முடிந்த பின்பும் வாரியத்தை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. இதனைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன.

இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு எதிராகவும் கர்நாடக மாநிலத்தில் வரும் 12ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்த சல ஒளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் பள்ளிகளில் தேர்வு நடைபெற்று வருவதால் மாணவ மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு முழு அடைப்புப் போராட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். மே 3ஆம் தேதி இது குறித்து மீண்டும் முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி