ஆப்நகரம்

மாட்டுக் கறிக்கு தடை: சட்டமன்றத்தில் பசுவுக்கு பூஜை!

மாட்டுக் கறிக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடக சட்டமன்றத்தில் பசுவுக்கு பூஜை நடத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Dec 2020, 10:59 pm

கர்நாடக சட்டமன்றத்தில் இன்று பசுவதை தடுப்பு மற்றும் கால்நடை பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்படி, மாட்டுக்கறி, அதாவது பசு, எருது, கன்று, 13 வயதுக்கு குறைவான எருமை ஆகியவற்றை கொலை செய்தால் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
Samayam Tamil Cow Poojai


தொடர்ந்து தவறு செய்தால் 10 லட்சம் ரூபாய் அபராதமும், ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். மசோதா தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, சட்டமன்றத்திற்கு பசு மாடுகள் அழைத்துவரப்பட்டன. கர்நாடக கால்நடை வளர்ப்பு துறை அமைச்சர் பிரபு சவன் பசுக்களுக்கு பூஜை நடத்தினார்.

விருந்தில் சாப்பிட்ட தலித் இளைஞர் அடித்துக் கொலை!

இதுகுறித்து அமைச்சர் பிரபு சவன் NDTV ஊடகத்திடம் பேசியபோது, “கர்நாடகத்தின் ஆறு கோடி மக்களின் ஆசியாலும், மூத்த தலைவர்கள் ஆசியாலும் பசுக்களுக்கு பூஜை நடைபெற்றுள்ளது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய முதல்வருக்கும், தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு பசு பூஜை நடைபெறுவது இதுவே முதல் முறை” என்று தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் நுழைந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய பிரபு சவன், “கர்நாடகத்தின் ஆறு கோடி மக்களுக்கும் இதுவொரு நற்செய்தி. கோமாதா (பசு) எனது தாய். இது மிருக பாதுகாப்புக்கான சட்டம். அதனால்தான் கர்நாடகத்தில் இதை நிறைவேற்றுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

dhanush ஒரே நாளில் 2 குட்நியூஸ்: தனுஷ் ரசிகர்கள் செம ஹேப்பி

எனினும், இந்த சட்டத்துக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டமன்றத்தில் எந்தவொரு உறுப்பினருக்குமே மசோதாவின் நகல் வழங்கப்படவில்லை என சித்தராமைய்யா குற்றம்சாட்டியுள்ளார்.

அடுத்த செய்தி