ஆப்நகரம்

வயலில் இறங்கி நாற்றுநட்ட முதல்வர்; குறைகேட்க மாதம் ஒருநாள் விவசாயிகளுடன் தங்க முடிவு!

விவசாயிகள் குறைகேட்க மாதம் ஒருநாள், அவர்களுடன் தங்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி முடிவு செய்துள்ளார்.

Samayam Tamil 12 Aug 2018, 9:58 am
மண்டியா: விவசாயிகள் குறைகேட்க மாதம் ஒருநாள், அவர்களுடன் தங்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி முடிவு செய்துள்ளார்.
Samayam Tamil Kumaraswamy


கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவமழையால், 10 ஆண்டுகள் நீடித்த வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களான குடகு, மண்டியா, மைசூரு, ராமநகர், துககூரு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வருண பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும் மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா சீதாபுரா வயலில் நெல் நாற்று நடவு பணி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதில் முதலமைச்சர் குமாரசாமி கலந்து கொண்டார்.

முன்னதாக அவர் சீதாபுராவில் உள்ள 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டார். நாற்று நடவு பணியின் போது வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, குமாரசாமி வயலில் இறங்கினார்.

சுமார் 5 நிமிடங்கள் நாற்றுகளை நடவு செய்தார். அவருடன் 90 பெண் தொழிலாளர்கள் உட்பட, 120 பேர் நடவு செய்தனர். இதையடுத்து பேசிய முதலமைச்சர் குமாரசாமி, கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் மாதந்தோறும் ஒருநாள் விவசாயிகளுடன் தங்கியிருந்து குறைகள் கேட்கும் திட்டம் தொடங்கப்படும் என்றார்.

Karnataka CM Kumaraswamy works with farmer to understand their problems.

அடுத்த செய்தி