ஆப்நகரம்

கர்நாடகாவில் 40 ஆண்டுகால வரலாற்றை, 5 ஆண்டுகளில் மாற்றியமைத்து சித்தராமையா சாதனை!

5 ஆண்டுகால ஆட்சியில் முதலமைச்சர் சித்தராமையா புதிய சாதனை படைத்துள்ளார்.

Samayam Tamil 31 Mar 2018, 4:55 pm
பெங்களூரு: 5 ஆண்டுகால ஆட்சியில் முதலமைச்சர் சித்தராமையா புதிய சாதனை படைத்துள்ளார்.
Samayam Tamil Siddaramaiah
சித்தராமையா


கர்நாடக மாநிலத்தில் கடந்த 1972ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேவராஜ் அர்ஸ் வென்று முதல்வராக பொறுப்பேற்றார்.

இவர் பல்வேறு சிக்கல்களை முறியடித்து, 1977ல் 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்தார். இதையடுத்து 1978ல் நடைபெற்ற தேர்தலிலும் தேவராஜ் அர்ஸ் வெற்றி பெற்றார்.

ஆனால் 2 ஆண்டுகள் மட்டுமே முதல்வராக பதவி வகித்தார். இவரைத் தொடர்ந்து, 1980ஆம் ஆண்டு முதல் 1983 வரை குண்டுராவ் முதல்வராக இருந்தார். 1983ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்றது.

அப்போது ராமகிருஷ்ண ஹெக்டே முதல்வரானார். இந்நிலையில் 1984ல் மக்களவை தேர்தலில் ஜனதா கட்சி படுதோல்வியை தழுவியதால், ராமகிருஷ்ண ராஜினாமா செய்தார்.

இதையடுத்து முதல்வராக பதவி வகித்த எஸ்.ஆர்.பொம்மை, வீரேந்திர பாட்டீல், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, தேவகவுடா, கே.ஹெச்.பாட்டீல், எஸ்.எம்.கிருஷ்ணா, தரம்சிங், குமாரசாமி, எடியூரப்பா, சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோரும் பல்வேறு காரணங்களால் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடத்தவில்லை.

ஆனால் 2013ஆம் மே மாதம் நடத்தப்பட்ட சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, சித்தராமையா முதல்வரானார்.

இவர் 5 ஆண்டுகளை முழுமையாக பூர்த்தி செய்து, 40 ஆண்டுகள் இல்லாத வரலாற்றை நிகழ்த்தி, சாதனை படைத்துள்ளார்.

Karnataka CM Siddaramaiah completes his 5 year tenure with 40 year record.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்