ஆப்நகரம்

சட்டசபை தேர்தலில் வாக்குச்சீட்டு முறை வேண்டும்; கர்நாடக முதல்வர் சித்தராமையா வலியுறுத்தல்!

சட்டசபை தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

TNN 16 Dec 2017, 8:33 am
பெங்களூரு: சட்டசபை தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil karnataka cm siddaramaiah demans use of ballot papers on election
சட்டசபை தேர்தலில் வாக்குச்சீட்டு முறை வேண்டும்; கர்நாடக முதல்வர் சித்தராமையா வலியுறுத்தல்!


வரும் 2018ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ஆளும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் ராய்ச்சூரில் முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மோசடி செய்யலாம்.

எனவே பழைய தேர்தல் முறையான வாக்குச்சீட்டு முறைக்கு மாறிவதில் தவறில்லை. இதுதொடர்பாக வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே, இந்த கருத்தை பதிவு செய்கிறேன்.

தேர்தல் ஆணையம் சுயாட்சி பெற்ற அமைப்பாக தான் விளங்குகிறது. ஆனால் தேர்தல் ஆணையர்களை மத்திய அரசே நியமிக்கிறது.

குஜராத் தேர்தல் முடிவுகள் கர்நாடக தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று சித்தராமையா கூறினார்.

Karnataka CM Siddaramaiah demans use of ballot papers on election.

அடுத்த செய்தி