கர்நாடகா மாநில முதல்வர் குமாரசாமி இன்று நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரவுள்ள நிலையில், பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழ அதிக வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்ததில் இருந்தே பல சட்டமன்ற உறுப்பினர்களிடையே திருப்தி நிலவி வந்தது. சில உறுப்பினர்கள் தங்களது ஆட்சேபனையை வெளிப்படையாகவே தெரிவித்தனர்.
Also Read: சபாநாயகருக்கே முழு அதிகாரம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், கூட்டணிக்கட்சிகளைச் சேர்ந்த 16 சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் வழங்கியுள்ளனர். இதனால், கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது தகுதி நீக்கம் குறித்து சபாநாயகருக்கு எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தது. அதே வேளையில், கர்நாடகா சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிருப்தி உறுப்பினர்கள் கலந்துகொள்ள உத்தரவிட முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
Also Read: விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கிரிக்கெட் விளையாடும் எடியூரப்பா
இதனைத் தொடர்ந்து கா்நாடகா சட்டமன்றத்தில் இன்று குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று மஜத அதிருப்தி உறுப்பினர்களுக்கு கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார். வாக்கெடுப்பில் இந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளா விட்டாலோ, அரசுக்கு எதிராக வாக்களித்தாளோ கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
225 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடகா சட்டமன்றத்தில், காங்கிரஸ், மஜத கூட்டணிக்கு 117 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் இதில் தற்போது 16 உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளனர். இன்று நடைபெறும் வாக்கெடுப்பில் இந்த 16 உறுப்பினர்களும் கலந்துகொள்ளாத பட்சத்தில் கூட்டணி ஆட்சியின் பலம் 101ஆக குறைந்துவிடும்.
Also Read: கர்நாடகாவில் காங்கிரஸ் பிடியில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ., எஸ்கேப்
பாஜகவுக்கு 107 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ததைப் போன்று குமாரசாமி ரஜினாமா செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்ததில் இருந்தே பல சட்டமன்ற உறுப்பினர்களிடையே திருப்தி நிலவி வந்தது. சில உறுப்பினர்கள் தங்களது ஆட்சேபனையை வெளிப்படையாகவே தெரிவித்தனர்.
Also Read: சபாநாயகருக்கே முழு அதிகாரம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், கூட்டணிக்கட்சிகளைச் சேர்ந்த 16 சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் வழங்கியுள்ளனர். இதனால், கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது தகுதி நீக்கம் குறித்து சபாநாயகருக்கு எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தது. அதே வேளையில், கர்நாடகா சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிருப்தி உறுப்பினர்கள் கலந்துகொள்ள உத்தரவிட முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
Also Read: விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கிரிக்கெட் விளையாடும் எடியூரப்பா
இதனைத் தொடர்ந்து கா்நாடகா சட்டமன்றத்தில் இன்று குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று மஜத அதிருப்தி உறுப்பினர்களுக்கு கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார். வாக்கெடுப்பில் இந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளா விட்டாலோ, அரசுக்கு எதிராக வாக்களித்தாளோ கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
225 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடகா சட்டமன்றத்தில், காங்கிரஸ், மஜத கூட்டணிக்கு 117 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் இதில் தற்போது 16 உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளனர். இன்று நடைபெறும் வாக்கெடுப்பில் இந்த 16 உறுப்பினர்களும் கலந்துகொள்ளாத பட்சத்தில் கூட்டணி ஆட்சியின் பலம் 101ஆக குறைந்துவிடும்.
Also Read: கர்நாடகாவில் காங்கிரஸ் பிடியில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ., எஸ்கேப்
பாஜகவுக்கு 107 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ததைப் போன்று குமாரசாமி ரஜினாமா செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.