ஆப்நகரம்

நீங்க என்ன ரூ.2 கோடி கொடுக்கறது? நாங்க ஃப்ரியா ஏற்பாடு செஞ்சிட்டோம் - கர்நாடக அரசு அதிரடி!

மாநிலத்திற்குள் பயணித்து சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கு இலவச பயணத்தை கர்நாடக அரசு ஏற்பாடு செய்து தந்துள்ளது.

Samayam Tamil 4 May 2020, 1:52 pm
கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கால் வெவ்வேறு பகுதிகளில் சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப கடந்த வியாழன் அன்று மாநில அரசு அனுமதி அளித்தது. இதற்காக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால் பேருந்துகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக நேற்று காலை துணை முதலமைச்சர் லக்‌ஷ்மன் சவாதியிடம் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் எடியூரப்பா பேசியுள்ளார். அதில் வரும் செவ்வாய் கிழமை வரை புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்ப இலவச பயணத்தை ஏற்பாடு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
Samayam Tamil கர்நாடக புலம்பெயர் தொழிலாளர்கள்


இந்த சூழலில் காலை 10.45 மணியளவில் மெஜிஸ்டிக் பேருந்து நிலையத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டிகே சிவக்குமார், ஹெச்.கே.பட்டில், தினேஷ் குண்டு ராவ், கிருஷ்ண பைரகவுடா, பிரியங் கார்கே, சலீம் அகமது உள்ளிட்டோர் சென்றுள்ளார். அங்கு கே.எஸ்.ஆர்.டி.சி மேலாண் இயக்குநரிடம் ரூ.2 கோடிக்கு இரண்டு வங்கி செக்குகள் கொடுத்தனர்.

புதிதாக ஒரு வழக்கு பாய்ந்தது - மாத்தி மாத்தி கட்டம் கட்டப்படும் அர்னாப் கோஸ்வாமி!

இதன்மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர். இதற்கிடையில் மாநில அரசு இலவச பயணத்தை ஏற்பாடு செய்தது தங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் கட்சியினர் பெருமைபடக் கூறுகின்றனர்.

மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, பயண செலவு உள்ளிட்டவற்றை அரசால் செய்து தர முடியவில்லை என்று நாங்கள் தர தயாராக இருக்கிறோம் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு பேட்டியளித்த துணை முதலமைச்சர் சவாதி, சனிக்கிழமை அன்று நிலைமை கையை மீறி போய்விட்டது.

நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் மெஜிஸ்டிக் பேருந்து நிலையத்தில் குவியத் தொடங்கினர். எங்களுக்கு வேறு வழியில்லை. இலவச பயணத்தை அறிவித்துவிட்டோம் என்றார். பெங்களூரு மற்றும் மெஜிஸ்டிக் பகுதியில் இருந்து 7 பேர் பாஜக அரசில் அமைச்சர்களாக இருக்கின்றனர்.

ஆனால் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ஒருவர் கூட முன்வரவில்லை என்று குற்றம்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினையை பார்க்க அரசுக்கு கண் இல்லை.

கோவிட்-19: மதுக்கடைகள் திறப்பால் உற்சாகமடைந்த மதுபிரியர்கள் - நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

அவர்களின் அழுகுரலை கேட்க காதுகள் இல்லை. தொழிலாளர்களுக்கு உதவ இதயமே இல்லை. மெஜிஸ்டிக்கிற்கு வந்து ஒரு அமைச்சர் கூட நிலைமையை ஆராயவில்லை. பொறுப்பான எதிர்க்கட்சி என்ற முறையில் உணவு, பயணம் உள்ளிட்ட வசதிகளை செய்து தர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

அடுத்த செய்தி