கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளது. வரும் ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அரசு ஊழியர்கள் பரபரப்பை கிளப்பினர். அரசு ஊழியர்கள் போராட்டம்
முன்னதாக கர்நாடகாவில் பணிபுரிந்து வரும் 10 லட்சம் ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்றியமைக்க 7வது ஊதியக் குழு மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அமல்படுத்தப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் அரசு ஊழியர்கள் சங்கம் மூன்று முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தது. அதாவது,
கர்நாடக அரசு மீது குற்றச்சாட்டு
இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பிப்ரவரி மாத இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் கர்நாடக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அரசு ஊழியர்கள் பெங்களூரு பிபிஎம்பி வளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அரசு அறிவிப்பு வெளியிடும் வரை காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.
வேலைநிறுத்த போராட்டம்
இந்த போராட்டத்தில் பல லட்சம் பேர் ஈடுபட்டதால் அரசு பணிகள் முடங்கின. இதையடுத்து முதல்வர் பசவராஜ் பொம்மை முக்கிய ஆலோசனை நடத்தினார். போக்குவரத்து, சுகாதாரம், கல்வி ஆகிய துறை சார்ந்த பணிகளில் பாதிப்பு ஏற்படாமல் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிலையில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சம்பள உயர்வு
அதில், அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 17 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. எனவே அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அடுத்த சில நிமிடங்களில் 17 சதவீத சம்பள உயர்விற்கான அரசாணை வெளியிடப்பட்டது. வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் சங்கங்கள் புகார்
இதன்மூலம் கர்நாடக மாநில அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 2,890 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதிகபட்ச ஊதியம் 25,602 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து கர்நாடக அரசு ஊழியர்கள் சங்கம் தங்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டது. இருப்பினும் ஊழியர் சங்கங்களுக்குள் குழப்பமான சூழல் ஏற்பட்டது. தங்களை கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுத்துவிட்டதாக ஒரு பிரிவினர் குற்றம்சாட்டினர்.
திருப்தி அளிக்கவில்லை
அதில் விதான சவுதா ஊழியர்கள் சங்கத்தினரும் அடங்குவர். இதன் தலைவர் குருசாமி பேசுகையில், இடைக்கால சம்பள உயர்வு 17 சதவீதம் திருப்தி அளிக்கவில்லை. இதை முன் தேதியிட்டு வழங்க வேண்டும். குறைந்தது 25 சதவீதம் உயர்த்தி வழங்கியிருக்கலாம். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அமைக்கப்பட்ட ஏற்கனவே அமைக்கப்பட்ட குழு என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக கர்நாடகாவில் பணிபுரிந்து வரும் 10 லட்சம் ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்றியமைக்க 7வது ஊதியக் குழு மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அமல்படுத்தப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் அரசு ஊழியர்கள் சங்கம் மூன்று முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தது. அதாவது,
- 7வது ஊதியக் குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்
- பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்
- இடைக்கால நிவாரணமாக 40 சதவீதம் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும்
கர்நாடக அரசு மீது குற்றச்சாட்டு
இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பிப்ரவரி மாத இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் கர்நாடக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அரசு ஊழியர்கள் பெங்களூரு பிபிஎம்பி வளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அரசு அறிவிப்பு வெளியிடும் வரை காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.
வேலைநிறுத்த போராட்டம்
இந்த போராட்டத்தில் பல லட்சம் பேர் ஈடுபட்டதால் அரசு பணிகள் முடங்கின. இதையடுத்து முதல்வர் பசவராஜ் பொம்மை முக்கிய ஆலோசனை நடத்தினார். போக்குவரத்து, சுகாதாரம், கல்வி ஆகிய துறை சார்ந்த பணிகளில் பாதிப்பு ஏற்படாமல் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிலையில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சம்பள உயர்வு
அதில், அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 17 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. எனவே அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அடுத்த சில நிமிடங்களில் 17 சதவீத சம்பள உயர்விற்கான அரசாணை வெளியிடப்பட்டது. வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் சங்கங்கள் புகார்
இதன்மூலம் கர்நாடக மாநில அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 2,890 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதிகபட்ச ஊதியம் 25,602 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து கர்நாடக அரசு ஊழியர்கள் சங்கம் தங்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டது. இருப்பினும் ஊழியர் சங்கங்களுக்குள் குழப்பமான சூழல் ஏற்பட்டது. தங்களை கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுத்துவிட்டதாக ஒரு பிரிவினர் குற்றம்சாட்டினர்.
திருப்தி அளிக்கவில்லை
அதில் விதான சவுதா ஊழியர்கள் சங்கத்தினரும் அடங்குவர். இதன் தலைவர் குருசாமி பேசுகையில், இடைக்கால சம்பள உயர்வு 17 சதவீதம் திருப்தி அளிக்கவில்லை. இதை முன் தேதியிட்டு வழங்க வேண்டும். குறைந்தது 25 சதவீதம் உயர்த்தி வழங்கியிருக்கலாம். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அமைக்கப்பட்ட ஏற்கனவே அமைக்கப்பட்ட குழு என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பினார்.