ஆப்நகரம்

இன்று முதல் இரவுநேர ஊரடங்கு; மாநில அரசு திடீர் உத்தரவு!

புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக திடீரென இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Dec 2020, 1:47 pm
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு பயணிக்கும் பொதுமக்களுக்கு வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த டிசம்பர் ஒன்று முதல் 21ஆம் தேதி வரை இங்கிலாந்தில் இருந்து 2,127 பேர் கர்நாடக மாநிலத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் உரிய முறையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இன்று (டிசம்பர் 23) இரவு முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
Samayam Tamil Karnataka Night Curfew


இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்படும். வரும் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் பேசுகையில், இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.

இன்னும் ஒரே வாரம் தான்; கொரோனா தடுப்பூசி குறித்து ஹேப்பி நியூஸ்!

இது இந்தியாவிற்கும் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே கர்நாடக மாநிலத்தில் பரவுவதை தடுக்கும் வகையில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே இரவு 10 மணிக்கு மேல் எந்தவொரு நிகழ்ச்சிகளோ அல்லது விழாக்களோ கொண்டாடக் கூடாது. இது கிறிஸ்துமஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும்.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களைத் தனிமைப்படுத்தி கொரோனா சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவர். வெளிநாடுகளில் இருந்து கர்நாடகாவிற்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்கள் பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக RT-PCR நெகடிவ் பரிசோதனை சான்று பெற்று வரவேண்டியது கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

2020ம் ஆண்டின் டாப் 5 நடிகர்கள்!

நேற்றைய தினம் பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இரவுநேர ஊரடங்கு மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்திருந்தார்.

அடுத்த செய்தி