ஆப்நகரம்

Corona in India: இறந்தது உண்மைதான்... ஆனால், கொரோனாவால் அல்ல

ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த அவரின் சளி, ரத்த மாதிரிகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில்தான், இன்று உயிரிழந்தார்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Mar 2020, 3:59 pm
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பும், கோவிட் 19 நோயால் ஏற்படும் உயிரிழப்பும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகமெங்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேலாக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
Samayam Tamil covid 19


உலகில் 119 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வராது என்ற நம்பிக்கையிலும், இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது என்ற துடிப்பிலும் வினையாற்றிக்கொண்டிருந்த இந்தியாவுக்கு எப்படியோ வந்து சேர்ந்தது கொரோனா பாதிப்பு.

இதுவரை 62 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் நேற்று வரை (10.03.2020) வெளியாகி வந்தன. இந்நிலையில், இன்று கர்நாடகாவில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து இந்தியாவில் முதல் கொரோனா பலி என்று செய்திகள் வெளியாயின.


உசைன் சித்திக் என்ற 76 வயது முதியவருக்கு, கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அவர் ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இறந்துபோனார் என்று செய்திகள் வெளியாகின.



ஆனால், கர்நாடக அரசு இதுகுறித்து வெளியிட்ட செய்தியறிக்கையில், “ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த அவரின் சளி, ரத்த மாதிரிகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில்தான், இன்று உயிரிழந்தார்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

சென்னை சர்ச்களில் முத்தம் இல்லை நமஸ்தே மட்டுமே, கொரோனா கொடுமை!

ஆனால், அவரது இறப்பிற்கான காரணம் என்ன என்பது அந்த பத்திரிகைச் செய்தியில் சொல்லப்படவில்லை.

அடுத்த செய்தி