ஆப்நகரம்

கொரோனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்: அரசு எச்சரிக்கை!

கொரோனாவின் இரண்டாம் அலை வீசப்போவதாக கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.

Samayam Tamil 11 Dec 2020, 10:36 pm

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் 98 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1.42 லட்சத்துக்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனாவின் இரண்டாம் அலை வீசப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil Representational image


கர்நாடக மாநிலத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை வீசப்போவதாக கணிப்புகல் கூறுகின்றன. இந்நிலையில், கொரோனாவின் அடுத்த அலையை சமாளிக்க கர்நாடக அரசு தயாராகி வருகிறது.

பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் ஜெனரேட்டர், சோதனை கருவிகள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக கர்நாடக அரசு 82 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.

அடுத்த தடுப்பூசியும் ஓகே ஆகிருச்சு: ஹேப்பி நியூஸ்!

கொரோனாவின் இரண்டாம் அலை வீசுமென எதிர்பார்க்கப்படுவதால், அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்தவொரு எமர்ஜென்சி சூழலையும் எதிர்கொள்ள அரசு ஆயத்தமாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்துள்ளதால் இரண்டாம் அலையில் இருந்து தப்பித்துவிட்டோம் என நம்பக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கோவிட்-19 பரிசோதனையை அதிகரிக்கும்படி ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 20 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை கொரோனாவின் இரண்டாம் அலை அடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் புத்தாண்டு கொண்டாட்டங்கள், திருமண நிகழ்ச்சிகள், மத நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் போன்ற ஏராளமான மக்கள் பங்கேற்கும் கூட்டங்களை தவிர்க்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி