ஆப்நகரம்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டவர் மாரடைப்பால் பலி: பொது மக்கள் பீதி!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 18 Jan 2021, 10:45 pm
இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரத் தேவைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கடந்த 16ஆம் தேதி முதல் சுகாதார ஊழியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுதப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்ஸின் தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது. இதன் முடிவுகள் முழுவதுமாக கிடைப்பதற்குள் அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அதேசமயம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பலருக்கும் ஒவ்வாமை உள்ளிட்ட பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டன. இவர்கள் தொடர் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த சுகாதாரத்துறை ஊழியரான நாகராஜு (43) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த 16ஆம் தேதி மதியம் 1 மணியளவில் கொரோனா தடுப்பூசி போட்ட அவர், இன்று காலை வரை நன்றாக இருந்துள்ளார். ஆனால், வழக்கம் போல பணிக்கு சென்ற அவருக்கு காலை 9.30 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று கர்நாடக மாநில சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியால் சுகாதாரப் பணியாளர் மரணமா? பரபரப்பு பின்னணி!

அதேசமயம், தடுப்பூசி போட்டுக் கொண்ட மற்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி