ஆப்நகரம்

சுதந்திர தினம்: மாணவர்களுக்கு அறிவுறுத்தல் - உயர் கல்வித்துறை சுற்றறிக்கை!

சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறிவுறுத்தி உயர் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது

Samayam Tamil 4 Jul 2022, 10:58 am
நம் நாடு விடுதலை அடைந்ததை கொண்டாடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 75ஆவது சுதந்திர தின விழா, நடப்பாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது பவள ஆண்டு என்பதால், கோலாகலமாக கொண்டாட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
Samayam Tamil சுதந்திர தினம்
சுதந்திர தினம்


இந்த நிலையில், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும், கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் கர்நாடக உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களில் படித்து வரும் மாணவ, மாணவிகள் அனைவரது வீடுகளிலும் ஆகஸ்டு 11 முதல் 17ஆம் தேதி வரை மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் கீழ் வரும் அனைத்து கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், அரசு, உதவி பெறும், உதவிபெறாத கல்லூரிகள், டிப்ளமோ கல்லூரிகள் நமது தேசியகொடியை ஏற்றி தங்கள் தேசிய பெருமையை வெளிப்படுத்த வேண்டும்.

அதிமுக இரண்டுபட்டால் பாஜகவுக்கு கொண்டாட்டம்? அமித்ஷா போடும் பக்கா பிளான்!

இதுகுறித்து மாணவ-மாணவிகளுக்கு தெரியப்படுத்தவும், அந்தந்த கல்வி நிர்வாகங்கள், அறிவிப்பு பலகையில் தகவல்களை வெளியிட வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி