ஆப்நகரம்

900 கோடி வரி ஏய்ப்பு உறுதி... கல்கி பகவானின் சொத்துகளை முடக்கியது வருமானவரித்துறை.

கர்நாடகாவின் கல்கி பகவான் சாமியார், அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இருவரும் தலைமறைவாகினர். பிறகு நாங்கள் தலைமறைவாகவில்லை என வீடியோ வெளியீடும் நடந்தது.

Samayam Tamil 21 Dec 2019, 11:08 am
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் 40 இடங்களில் 4 நாள்களுக்கும் மேலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய கர்நாடக கல்கி பகவான் சாமியார் வரி ஏய்ப்பு செய்தது வருமான வரித்துறையால் உறுதி செய்யப்பட்டு, கல்கி பகவானின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil kalki bagwan


500 கோடி ரூபாய்க்கும் மேலாக வரி ஏய்ப்பு செய்தது மற்றும் அந்நிய முதலீடு ஆகிய குற்றங்களுக்காக கர்நாடகாவின் கல்கி பகவான் சாமியார், அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இருவரும் தலைமறைவாகினர். பிறகு நாங்கள் தலைமறைவாகவில்லை என வீடியோ வெளியீடும் நடந்தது.

எனினும், வருமான வரித்துறையினர் சோதனையைத் தொடர்ந்தனர். அதில் 44 கோடி ரூபாய் ரொக்கம், 90 கிலோ தங்கம், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் போன்ற கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வருமான வரிசோதனையில் இதுவரை 800கோடி ரூபாய் வரிஏய்ப்பு நடைபெற்றதும் தெரியவந்தது.

500 கோடியை வளைத்த கல்கி சாமியார் ‘எஸ்கேப்’: திகைக்கும் அதிகாரிகள்!

இந்நிலையில் , கல்கி பகவானின் ஆசிரமத்து சொத்துகள் முடக்கபட்டுள்ளன. மேலும் கல்கி குடும்பத்துக்குச் சொந்தமான 907 ஏக்கர் நிலத்தை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இதுபோக, கோவை, உதகை, சத்தியவேடு, பெல்காம் போன்ற பல பகுதிகளில் ஆசிரமத்தின் ஊழியர்கள் மற்றும் நம்பிக்கையான பக்தர்கள் என (பினாமியாக) பலரின் பெயரில் இந்த நிலங்கள் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி