ஆப்நகரம்

போலீசாருக்கு நாளை விடுமுறை கிடையாது; ஆணையர் உத்தரவு!

போலீசார் நாளை விடுமுறை எடுக்கக் கூடாது என்று ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Samayam Tamil 16 May 2018, 10:39 pm
பெங்களூரு: போலீசார் நாளை விடுமுறை எடுக்கக் கூடாது என்று ஆணையர் உத்தரவி பிறப்பித்துள்ளார்.
Samayam Tamil Karnataka Police
நாளை விடுமுறை கிடையாது


நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104 தொகுதிகளுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37, மற்றவை 3 தொகுதிகளைப் பெற்றுள்ளன.

இந்தச் சூழலில் பாஜகவும், காங்கிரஸ் - மஜத கூட்டணியும் ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இந்நிலையில் பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார்.

அவருக்கு பெரும்பான்மையை நிரூபிக்க, 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை காலை 9.30 மணிக்கு எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்கிறது.

இதன் காரணமாக போலீசார் விடுப்பு எடுக்கக் கூடாது என்று ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Karnataka Police wont take leave tomorrow.

அடுத்த செய்தி