ஆப்நகரம்

பள்ளிகள் திறப்பு: ஒருவழியாக தேதியை அறிவித்த அரசு!

பள்ளிகள் திறக்கப்படும் தேதியை மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Samayam Tamil 19 Dec 2020, 7:39 pm
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பள்ளிகள், கல்லூரிகளும் மூடப்பட்டன. ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டாலும், பாதுகாப்பு கருதி பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்படாமல் இருந்தன.
Samayam Tamil School


இந்நிலையில், ஜனவரி 1ஆம் தேதி முதல் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. மேலும், 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை சிறு குழுக்களாக பிரித்து வகுப்பு நடத்தும் வித்யாகமா திட்டத்தையும் தொடர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

323 நாட்கள், சிக்கிய ஒரு கோடி பேர்; உலக அரங்கில் ஷாக் கொடுத்த இந்தியா!

பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில கோவிட்-19 ஆலோசனைக் குழு, சுகாதார மற்றும் கல்வித் துறை அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், பள்ளிகளை மீண்டும் திறக்க பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சுரேஷ் குமார் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுரேஷ் குமார் தெரிவித்தார்.

மேலும், 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் வித்யாகமா முறைப்படி வகுப்புகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் கல்வி வசதிகள் கிடைக்க வாய்ப்பில்லாத கிராமப்புற மாணவர்களுக்கு வித்யாகமா முறைப்படி பாடம் எடுக்கும்படி தனியார் பள்ளிகளிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா; இந்தியன் பனோரமாவில் 'அசுரன்', 'தேன்' தேர்வு!

எனினும், பள்ளிக்கு கட்டாயமாக வர வேண்டிய அவசியம் இல்லை. விருப்பப்பட்ட மாணவர்கள் ஆன்லைன் வழியில் வகுப்புகளை தொடரலாம். பள்ளிக்கு வரவிரும்பும் மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி