ஆப்நகரம்

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கர்நாடகா சபாநாயகர் சம்மன்

கர்நாடகா மாநிலத்தில் ராஜினாமா கடிதம் வழங்கிய 16 சட்டமன்ற உறுப்பினர்களும் நாளை காலை தம்மை நேரில் வந்து சந்திக்குமாறு அம்மாநில சபாநயகர் ரமேஷ் குமார் சம்மன் அனுப்பி உள்ளார்.

Samayam Tamil 22 Jul 2019, 11:17 am
கர்நாடகா மாநிலத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில் ராஜினாமா கடிதம் வழங்கிய 16 சட்டமன்ற உறுப்பினர்களும் நேரில் வந்து சந்திக்க சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.
Samayam Tamil Karnataka Speaker


கர்நாடகா மாநிலத்தில் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் வழங்கிய நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதான விவாதம் நடைபெற்று வருகிறது. 18, 19 ஆகிய இரு தினங்களாக கர்நாடகா ஆளும் கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து பேசிய நிலையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்ற கருத்து நிலவியது.

இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று சுயேட்சை உறுப்பினர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Also Read: இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு? அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!

மேலும் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென சபாநாயகர் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ராஜினாமா கடிதம் வழங்கிய 16 உறுப்பினர்களும் நாளை காலை 11 மணிக்கு தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு சபாநாயகர் ரமேஷ் குமார் சம்மன் அனுப்பி உள்ளார்.

முன்னதாக இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது உறுப்பினர்கள் யாரும் தன்னை நேரில் சந்தித்து முறையான விளக்கம் அளித்து கடிதத்தை வழங்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், உறுப்பினர்கள் நேரில் வந்து சந்திக்குமாறு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அடுத்த செய்தி