ஆப்நகரம்

கர்நாடகாவில் மேலும் 14 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் - சபாநாயகர் அதிரடி

கர்நாடகாவில் ஏற்கனவே 3 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 14 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Samayam Tamil 28 Jul 2019, 12:24 pm
கர்நாடகா புதிய முதல்வர் எடியூரப்பா நாளை பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ள நிலையில், அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
Samayam Tamil Karnataka Speaker


கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உறுப்பினர்கள் 15 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் வழங்கினர். மேலும் 2 சுயேட்சை உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் வழங்கினர்.

Also Read: பெயரில் Y-க்கு பதிலாக I போட்ட எடியூரப்பா: நியூமராலஜி அதிர்ஷ்டத்தை அளிக்குமா?

இதனைத் தொடர்ந்து கடந்த 23ம் தேதி குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் அரசு தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து புதிதாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடியூரப்பா நாளை சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இந்நிலையில், அம்மாநில சட்டமன்ற தலைவர் ரமேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராஜினாமா கடிதம் வழங்கிய அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேரை தகுதி நீக்கம் செய்வதாக அதிரடியாக உத்தரவிட்டார்.

Also Read: காங்கிரஸை கழற்றிவிட்டு பாஜகவுக்கு வால் பிடிக்கும் மஜத!

ஏற்கனவே 3 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.

போட்டியிட முடியாது
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களும் தற்போதைய ஆட்சி காலம் நிறைவடையும் வரை, அதாவது அடுத்த 4 ஆண்டுகளுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

14 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்திற்கும், நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பிற்கும் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்று பாஜக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தமாக 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடகா சட்டமன்றத்தின் தற்போதைய பலம் 207ஆக குறைந்துள்ளது.

Also Read: சக்தி மிக்க இந்தியர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி, மோடி முதலிடம்

இந்நிலையில், பாஜக 105 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மேலும் 1 சுயேட்சை உறுப்பினர், பாஜகவுக்கு வாக்களிப்பதாக தெரிவித்துள்ளதால், வாக்கெடுப்பில் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்கும் என்ற நிலை உள்ளது.

அடுத்த செய்தி