ஆப்நகரம்

எம்பிக்களை தொடர்ந்து கொரோனாவுக்கு பலியான எம்எல்ஏ... கலக்கத்தில் கர்நாடகா

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு எம்.பி.க்கள் கொரோனாவுக்கு அடுத்தடுத்து உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏவான நாராயண் ராவ் கொரோனாவுக்கு இன்று பலியாகினார்.

Samayam Tamil 24 Sep 2020, 8:56 pm
கர்நாடக மாநிலம், பசவகல்யாணா தொகுதியின் எம்எல்ஏவாக பதவி வகித்தவர் நாராயண் ராவ். இவருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டதையடுத்து பெங்களூரு, பழைய விமான சாலையில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் கடந்த ஒன்றாம் தேதி (செப்.1) ராவ் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
Samayam Tamil mla rao


அங்கு அவருக்கு மருத்துவ நிபுணர் குழுவினர் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அவர் இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பெரும் தொற்றாக மாறியதன் விளைவாக நாராயண் ராவ் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 65.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி அசோக் கஸ்தி கொரோனா சிகிச்சை பலனின்றி சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவரை தொடர்ந்து, கர்நாடகத்தைச் சேர்ந்த மற்றொரு பாஜக எம்.பி.யும், மத்திய ரயில்வேத் துறை இணையமைச்சருமான சுரேஷ் அங்காடி கொரோனா தொற்று காரணமாக நேற்று உயிரிழந்தார்.

மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரோனாவால் காலமானார்

இந்நிலையில், இந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவான நாராயண் ராவ் இன்று கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மூன்று பேர் ஒரே வாரத்தில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது கர்நாடக மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி