ஆப்நகரம்

இரவு நேர ஊரடங்கு திடீரென வாபஸ்: அதிரடி உத்தரவு!

கர்நாடகாவில் இன்று இரவு முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 24 Dec 2020, 6:18 pm
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த சூழலில் 2021ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு வரவுள்ளது. இந்த பண்டிகை காலங்களை முன்னிட்டு இரவு நேரங்களில் மக்கள் அதிக அளவில் கூடினால் கொரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் ஏற்கெனவே பரவி வரும் வைரஸை விட வேகமாக பரவக்கூடிய தன்னைத் தானே தகவமைத்துக் கொண்ட புதிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கொரோனா குறித்த அச்சம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனுடனான சர்வதேச விமானப் போக்குவரத்தை இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

கடைகள் இயங்காது; வாகனங்கள் ஓடாது - அமலுக்கு வந்தது ஊரடங்கு!

மேலும், பிரிட்டனில் தாயகம் திரும்புவோருக்கு கட்டாய ஆர்டிபிசிஆர் பரிசோதனை, பயண வரலாற்றை சமர்பிக்க வேண்டும், நவம்பர் 25ஆம் தேதி முதல் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த அனைத்து பயணிகளையும் கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதனிடையே, இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவிற்கும் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே கர்நாடக மாநிலத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, இரவு 10 மணிக்கு மேல் எந்தவொரு நிகழ்ச்சிகளோ அல்லது விழாக்களோ கொண்டாடக் கூடாது. இது கிறிஸ்துமஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி 2ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை யாரும் வெளியே நடமாடக் கூடாது என்று கர்நாடக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், கர்நாடகாவில் இன்று இரவு முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் அடங்கிய தொழில்நுட்ப ஆலோசனை குழு பரிந்துரைகளை ஏற்று அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

அடுத்த செய்தி