ஆப்நகரம்

காஷ்மீர் பனிச்சரிவு: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவுகளில் பலியானவர்கள் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.

TNN 27 Jan 2017, 9:20 pm
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவுகளில் பலியானவர்கள் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil kashmir avalanche death toll climbs to 19
காஷ்மீர் பனிச்சரிவு: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு


காஷ்மீரில் உள்ள குரேஷ் பகுதியில் இந்திய ராணுவம் முகாம் அமைத்துள்ள இடத்தில் நேற்று ஏற்பட்ட பனிச்சரிவில் 10 ராணுவ வீரர்கள் பலியானார்கள். பலர் பனிக்குள் சிக்கியிருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.

இந்த பனிச்சரிவில் பாதுகாப்புப் பணியில் இருந்த 15 ராணுவ வீரர்களும் பொதுமக்கள் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர் என்று ராணுவம் அறிவித்துள்ளது. பலியான ராணுவ வீரர்களில் இரண்டு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி