ஆப்நகரம்

பலோசிஸ்தான் விவகாரத்தில் தீர்வு காண்பது எப்படி: அமெரிக்கா கருத்து

பலோசிஸ்தான் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர்தான் தீர்வு காண வேண்டும் என இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ரிச்சர்ட் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

TNN 24 Aug 2016, 8:26 pm
புதுதில்லி: பலோசிஸ்தான் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர்தான் தீர்வு காண வேண்டும் என இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ரிச்சர்ட் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kashmir balochistan to be decided by the parties involved us envoy
பலோசிஸ்தான் விவகாரத்தில் தீர்வு காண்பது எப்படி: அமெரிக்கா கருத்து


பாகிஸ்தானில், பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பலோசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாகப் பிரிக்கக் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. இத்தகையப் போராட்டங்களை முன்னெடுக்கும் மக்களை பாகிஸ்தான் அரசு சித்திரவதைக்கு உள்ளாக்குவதாகவும், மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இதனிடையே, பலோசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அராஜக போக்கை கையாள்வதாக சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு, பலோசிஸ்தான் குறித்து பேசிய பிரதமர் மோடி எல்லை மீறி விட்டார் என்றும், வருகிற மாதம் ஐநா சபையில் காஷ்மீர் விவகாரத்தை பலவந்தமாக எழுப்புவோம் என்றும் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், பலோசிஸ்தான் மற்றும் ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர்தான் தீர்வு காண வேண்டும் என இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ரிச்சர்ட் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவைப் போலவே அமெரிக்காவும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு தான். உலகின் எந்த மூலையில் தீவிரவாத சம்பவங்கள் நிகழ்ந்தாலும் அதனை ஒடுக்குவற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது என்றும் ரிச்சர்ட் வர்மா தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி